விருதுநகரில் போலீஸார் தாக்கியதாக கூறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற மாற்றுத்திறனாளியை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் அருகே திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(35). இவர் ஐ.டி.ஐ பயிற்சி பெற்றுள்ளார். இவரது மனைவி முத்துலட்சுமியுடன் ஆட்டோவில் லட்சுமி காலனியில் உள்ள எம்.பி அலுவலகத்திற்கு வேலைவாய்ப்புக் கேட்டு மனு அளிக்கச் சென்றார்களாம்.
அங்கு யாரும் இல்லாத காரணத்தால் ஓரமாக ஆட்டோவை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இற்ங்கி சென்றுள்ளார். உடனே அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆட்டோவில் காதலர்கள் நெருக்கமாக இருப்பதாக கூறி புகார் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த காவல் ஆய்வாளர் பார்த்திபன் போலீஸாருடன் வந்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் கணவன் மனைவி என்பது தெரிந்தது.
பின்னர் அங்கிருந்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுலைமான் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

